பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்து வருகைத்தரும் அனைத்து பிரதிநிதிகளும் இருவார கால கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகைதர முன்னரும், வந்த பின்னரும் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம தொற்று நோய் தடுப்பு வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். உலகின் எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் அரச பிரதிநிதிகள் கூட இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட வேண்டும் என்றும் அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம் எனவும் அவர் மேலும் கூறினார்.