10 நாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளை திருப்பி அழைத்துக் கொள்ள வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
60 வயதுக்கு மேல் தூதுவர்களாகப் பணியாற்றும் இராஜதந்திரிகளை திருப்பி அழைத்துக் கொள்ள வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி, கனடா, சுவிடன், எகிப்து, கியூபா, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தூதுவர்களையே திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், சேவையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு இவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது