(வன்னி நிருபர்)
தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் ஒருவர் வெள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில், தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ்(28) என்பவரே உயிரிழந்தவராவார்.
இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் அண்மையிலுள்ள மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்