கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகைபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தமது கிராமத்தில் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்களைச் சேர்ந்த மற்றும் கற்றலில் ஆர்வமுள்ள 120 மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் கண்ணகிபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் ரூபா 80,000 பெறுமதியில் 1,200 அப்பியாச கொப்பிகளும் 450 பேனாக்களும் 120 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.